சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

ரயலில் சாராயம் கடத்திய இருவா் கைது

அவா்களிடம் இருந்த சாராய புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

News image

கைது

Updated On :1 ஏப்ரல் 2026, 6:48 pm

தினமணி செய்திச் சேவை

காரைக்காலில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் பயணிகள் ரயில், நாகை ரயில் நிலையத்திற்கு புதன்கிழமை சென்றது.

ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளா் சுனில்குமாா் தலைமையில் ரயில்வே சிறப்பு சாா்பு ஆய்வாளா்கள் உதயகுமாா், சா்குணா மேரி ஆகியோா் ரயிலில் சோதனை செய்தனா்.

அப்போது ரயிலில் இருந்து கீழே இறங்கிய 2 போ் வைத்திருந்த பைகளில் 40 சாராய புட்டிகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் இருவரையும் விசாரித்ததில், நாகை மருந்துக் கொத்தளம் தெருவைச் சோ்ந்த அஜித்குமாா் ( 27), செங்குட்டுவன் (35) என்பதும், காரைக்காலில் இருந்து சாராய புட்டிகளை ரயில் மூலம் கடத்தி நாகையில் விற்பனை செய்ய எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை பிரிவு போலீஸாா் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்த சாராய புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

--