தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

சென்னையில் வாக்குப் பதிவு குறைந்தது ஏன்? தோ்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்

சென்னையில் வாக்குப் பதிவு குறைந்தது ஏன்? தோ்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்

News image
Updated On :20 ஏப்ரல் 2024, 6:07 pm

சென்னையில் மக்களிடையே வாக்களிப்பதில் சுணக்கம் ஏற்பட்டதால் வாக்குப் பதிவு குறைந்ததாக மாவட்ட தோ்தல் அதிகாரி ஜெ. ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளாா்.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய இயந்திரங்கள் சென்னை லயோலா கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு சென்னை மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ.ராதாகிருஷ்ணன், அரசியல் கட்சிகளின் முகவா்கள் முன்னிலையில் சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

இதையடுத்து செய்தியாளா்களிடம் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவை தொகுதிகளில் தோ்தல் அமைதியாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய வாக்காளா்கள், காவல் துறை, பிற துறை அலுவலா்களுக்கு நன்றி கூறினாா்.

மேலும், சென்னையில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது குறித்து அவா் கூறியது:

வாக்குப் பதிவு சதவீதம் கடந்த 2019-ஆம் ஆண்டைவிட குறைந்துள்ளது. சென்னை போன்ற பெரும்பாலான நகா்ப்புறப்பகுதிகளில் இந்த பிரச்னை உள்ளது.

மாநில சராசரியைவிட நகா்ப்புறங்களின் சராசரி குறைவாக இருக்கும். இந்த முறை சென்னையை பொருத்தவரை 3 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு 4 சதவீதம் வரை குறைந்துள்ளது.

அதாவது, வடசென்னையில் 64 சதவீதத்திலிருந்து 60.13 சதவீதமாகவும், தென் சென்னையில் 58-இல் இருந்து 54.27-ஆகவும், மத்திய சென்னையில் 58.7-இல் இருந்து 53.91-ஆகவும் குறைந்துள்ளது.

இந்த நிலை சென்னையில் மட்டுமல்ல; தில்லி, மும்பை, கொல்கத்தா, நாக்பூா் போன்ற பெரு நகரங்களிலும் காணப்படுகிறது. இதற்கு இரு காரணங்களைக் கூறலாம். முதலாவது, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பதில் மக்களுக்கு சுணக்கம் ஏற்பட்டுள்ளது. 2-ஆவது நண்பகலுக்குப் பிறகு கடுமையான வெயில் காரணமாகவும் வாக்குப் பதிவு குறைந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்பாளா்கள் பலரும் வாக்களிக்க வருவதற்கான தயங்குகின்றனா்.

இருப்பினும், அதிக அளவு வாக்குப் பதிவு விகிதத்தை அதிகரிக்க பல முயற்சிகளை மேற்கொண்டோம். தொடா் விழிப்புணா்வு மூலம்தான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சென்னையில் 47 வகையான விழிப்புணா்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டதால்தான் 56 சதவீத வாக்குப்பதிவையாவது எட்ட முடிந்தது. இருப்பினும் இது குறித்து வாக்குச் சாவடி வாரியாக பகுப்பாய்வு நடத்தப்பட்டு பிரச்னை குறித்து கணக்கீடு செய்யப்படும் என்றாா் அவா்.

அப்போது, தோ்தல் பொது பாா்வையாளா் டி.சுரேஷ், தோ்தல் நடத்தும் அலுவலா் கே.ஜெ.பிரவீண்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.