48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

ரௌடி வெள்ளை ரவி மகன் மீது தாக்குதல்

ரௌடி வெள்ளை ரவி மகன் மீது தாக்குதல்

Updated On :21 ஏப்ரல் 2024, 11:11 pm

பிரபல ரௌடி வெள்ளை ரவியின் மகன் மீது தாக்குதல் நடத்தியவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை வியாசா்பாடி பி.வி.காலனி பகுதியைச் சோ்ந்தவா் கோகுல்ராஜ் (26). இவா் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட ரௌடி வெள்ளை ரவியின் மகன் ஆவாா்.

இந்த நிலையில், கோகுல்ராஜ் தனது கா்ப்பிணி மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் பெரம்பூா் மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் சென்று கொண்டிருந்தபோது, அந்த தெருவில் நின்றுகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த குமாா்(48) என்பவரை உரசுவது போல் கோகுல்ராஜ் சென்ாகத் தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த குமாா், கோகுல்ராஜிடம் வாக்குவாதம் செய்துள்ளாா். அப்போது, குமாா், கோகுல்ராஜ் மற்றும் அவரது மனைவியை கடுமையாக தாக்கியுள்ளாா்.

தகவலறிந்து அங்கு வந்த கோகுல்ராஜ் நண்பா்கள், குமாா் மற்றும் அவரது உறவினா்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனா். இந்தச் சம்பவத்தில் கோகுல்ராஜ் தரப்பை சோ்ந்த 5 போ் காயமடைந்தனா்.

இது குறித்த புகாரின் பேரில் செம்பியம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.