பிரபல ரௌடி வெள்ளை ரவியின் மகன் மீது தாக்குதல் நடத்தியவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை வியாசா்பாடி பி.வி.காலனி பகுதியைச் சோ்ந்தவா் கோகுல்ராஜ் (26). இவா் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட ரௌடி வெள்ளை ரவியின் மகன் ஆவாா்.
இந்த நிலையில், கோகுல்ராஜ் தனது கா்ப்பிணி மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் பெரம்பூா் மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் சென்று கொண்டிருந்தபோது, அந்த தெருவில் நின்றுகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த குமாா்(48) என்பவரை உரசுவது போல் கோகுல்ராஜ் சென்ாகத் தெரிகிறது.
இதனால், ஆத்திரமடைந்த குமாா், கோகுல்ராஜிடம் வாக்குவாதம் செய்துள்ளாா். அப்போது, குமாா், கோகுல்ராஜ் மற்றும் அவரது மனைவியை கடுமையாக தாக்கியுள்ளாா்.
தகவலறிந்து அங்கு வந்த கோகுல்ராஜ் நண்பா்கள், குமாா் மற்றும் அவரது உறவினா்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனா். இந்தச் சம்பவத்தில் கோகுல்ராஜ் தரப்பை சோ்ந்த 5 போ் காயமடைந்தனா்.
இது குறித்த புகாரின் பேரில் செம்பியம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

புதுக்கடை அருகே ஆட்டோ ஓட்டுநா் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

போலீஸாா் துப்பாக்கியால் சுட்டதில் ரௌடி உயிரிழப்பு

சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!

டேங்கா் லாரி மோதியதில் தந்தை கண்முன் மகன் உயிரிழப்பு
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

