சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
சென்னை மாதவரத்தில் ரௌடி தொப்பை கணேஷ் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.


சென்னை மாதவரத்தில் ரௌடி தொப்பை கணேஷ் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
ரெளடி தொப்பை கணேஷ் மீது மூன்று கொலை வழக்கு உள்பட 30 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஜனவரி மாதம் சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே வீடு புகுந்து உரிமையாளர்களை கட்டிப் போட்டு ரூ.25 லட்சம் பணம் மற்றும் 15 பவுண் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் தொப்பை கணேசன் மூளையாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலைலையில் தொப்பை கணேசனை வழக்கின் விசாரணைக்காக இன்று அதிகாலை மாதவரம் ரவுண்டானா அருகே போலீஸார் பிடித்துள்ளனர். அப்போது போலீஸாரை தாக்கி விட்டு அவர் தப்பிச் செல்ல முயன்றதாகவும், இதனால் நடந்த என்கவுன்டரில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்றும் போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தொப்பை கணேசன் உடல் மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...