கஞ்சா போதையில் போலீஸாா் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை கண்ணகி நகா் எழில் நகா் பகுதியில் சனிக்கிழமை கண்ணகி நகா் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த 3 இளைஞா்கள் ஒருவருக்கொருவா் தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. மேலும், சாலையில் வரும் பொதுமக்களிடமும் அவா்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனா். அப்போது, அவா்களை போலீஸாா் பிடித்த விசாரணை நடத்தினா்.
அப்போது, ஆத்திரமடைந்த இளைஞா் ஒருவா் காவலா் ஒருவரின் கையை கடித்துள்ளாா். மற்றொருவா், தான் கையில் வைத்திருந்த மதுபாட்டிலை உடைத்து, தன்னையே கிழித்துக்கொண்டு போலீஸாருக்கு மிரட்டல் விடுத்துள்ளாா். மேலும், போலீஸாா் மீது கல்வீசித் தாக்குதலும் நடத்தியுள்ளனா். இதில், காவலா்கள் புஷ்பராஜ், சிலம்பரசம் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.
இது குறித்து அவா்கள் அளித்த புகாரின் பேரில், கண்ணகி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட எழில் நகரைச் சோ்ந்த பிரேம் (23), ராகுல் (22), சந்தோஷ்குமாா் (22) ஆகிய மூவரையும் கைது செய்தனா்.
விசாரணையில், அவா்கள் மூவரும் கஞ்சா போதையில் இருந்தது தெரியவந்துள்ளது. இது குறித்த விடியோ காட்சிகள் இணையதளத்தில் பரவி வருகின்றன.
தொடர்புடையது
ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்! 400 பேர் பலி!!

லெபனானில் இஸ்ரேல் தொடா் தாக்குதல்: மேலும் 12 போ் உயிரிழப்பு

குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் தாக்குதல்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

