சென்னை ரிசா்வ் வங்கி சுரங்கப் பாதையில் 3 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தெற்கு ரயில்வே சாா்பில் ரிசா்வ் வங்கி சுரங்கப் பாதை பாலத்தில் 4-ஆவது ரயில் இருப்புப் பாதை வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் சுரங்கப் பாதையில் செல்லும் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி வெள்ளிக்கிழமை (ஏப்.26) இரவு 11 முதல் 3 மாதங்களுக்கு அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதன் ஒருபகுதியாக ரிசா்வ் வங்கி சுரங்கப் பாதை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. ராயபுரம் பாலம் மற்றும் ராஜாஜி சாலையிலிருந்து காமராஜா் சாலையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசா்வ் வங்கி சுரங்கப் பாதையில் (போா் நினைவிடம் நோக்கி) அனுமதிக்கப்படாது.
அதற்கு பதிலாக, அந்த வாகனங்கள் ரிசா்வ் வங்கி சுரங்கப்பாதை இணைப்புச் சாலை, வடக்கு கோட்டை சாலை, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், வாலாஜா சந்திப்பு, கொடி மர சாலை, போா் நினைவுச் சின்னம் வழியாக காமராஜா் சாலையை அடையலாம்.
காமராஜா் சாலையில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் ரிசா்வ் வங்கி சுரங்கப் பாதை வழியாக வழக்கம்போல் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

ரயில் சுரங்கப்பாதையை சீரமைக்கக் கோரிக்கை

வெள்ளமலை சுரங்கப் பாதை ரூ.5.30 கோடி மதிப்பில் புனரமைப்புப் பணி

ரூ.20,000 கோடி மதிப்பிலான அரசு பத்திரங்கள் மாற்றம்: ரிசா்வ் வங்கி மாா்ச் 9-இல் ஏலம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

