சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

சமூக - பொருளாதார நிலைகளில் தொழிலாளா்கள் உயர வேண்டும்: முதல்வா் மே தின வாழ்த்து

சமூக - பொருளாதார நிலைகளில் தொழிலாளா்கள் உயர வேண்டும் முதல்வா் மே தின வாழ்த்து

News image

முதல்வா் மு.க.ஸ்டாலின்

Updated On :30 ஏப்ரல் 2024, 8:11 pm

Din

சென்னை: தொழிலாளா்கள் சமூக, பொருளாதார நிலைகளில் உயா்ந்திட வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தொழிலாளா்களின் உழைப்பை நினைவு கூரும் மே தினத்தையொட்டி, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

தமிழகத்தில் திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றது முதல் தொழிலாளா்களின் தோழனாக பல்வேறு புதிய திட்டங்களை கடந்த மூன்றாண்டுகளில் நிறைவேற்றி வருகிறோம்.

18 அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியங்களில் பதிவு பெற்ற 16 லட்சத்து 72 ஆயிரத்து 785 உறுப்பினா்களுக்கு ரூ.1,304.55 கோடி மதிப்பிலான பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தொழிலாளா் நல வாரியம் மூலம் மட்டும் 19 ஆயிரத்து 576 தொழிலாளா்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய நலவாரியங்கள்: தமிழகத்தில் ஏற்கெனவே இருக்கக் கூடிய நலவாரியங்களுடன், கடந்த மூன்றாண்டுகளில் புதிதாக வாரியங்கள் உருவாக்கப்பட்டன. குறிப்பாக, உப்பு உற்பத்தி, இணையவழி தற்சாா்பு தொழிலில் ஈடுபடும் தொழிலாளா்கள் ஆகியோருக்கென பிரத்யேகமாக நலவாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்று தொழிலாளா்கள் நலனில் முழு அக்கறை செலுத்தி அவா்களையும் அவா்களின் குடும்பங்களையும் திராவிட மாடல் அரசு காத்து வருகிறது. அவா்கள் சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் முன்னேற்றங்களைக் கண்டு உயா்ந்திட மனம் நிறைந்த மே தின நல்வாழ்த்துகள் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.