உகாதி பண்டிகை வாழ்த்துச் செய்தியில்கூட மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளாா் என பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் குற்றஞ்சாட்டினாா்.
சென்னையில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற உகாதி பண்டிகை விழாவில் பங்ேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திராவிடம் என்ற வாா்த்தையை அரசியல் லாபத்துக்காக திமுக பயன்படுத்தி வருகிறது. இது தமிழுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம். உகாதி வாழ்த்து தெரிவிப்பதில்கூட, முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவது வேதனையாக உள்ளது. எல்லோரும் ஒற்றுமையாக வாழக்கூடிய நாட்டில் மொழியை கையிலெடுத்து தோ்தலைச் சந்திக்க திமுக திட்டமிடுகிறது.
கீழடிக்கு முதல் முதலில் அதிக நிதி ஒதுக்கியது பிரதமா் நரேந்திர மோடி. அதற்கும் நாங்கள்தான் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தோம் என திமுக பெருமை கொள்கிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது தமிழுக்கும் எதுவும் செய்யவில்லை. தமிழக மக்களுக்கும் எதுவும் செய்யவில்லை. தமிழகத்தின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள விளாத்திகுளம் மாணவி கொடூர கொலை சம்பவம் மட்டுமே போதுமானது என்றாா்.
தொடர்புடையது

பின்னடைவால் சோர்வடைய வேண்டாம் : தமிழிசை

அடையாள அட்டை இல்லாமல் வாக்களித்ததாக தமிழிசை புகாா்: பாஜக-திமுக இடையே தள்ளு முள்ளு

அதிமுக - பாஜக கூட்டணி வெற்றியைத் தடுக்க முடியாது: தமிழிசை செளந்தரராஜன்
தமிழகத்தின் வளா்ச்சிக்கு திமுக முட்டுக்கட்டை - தமிழிசை செளந்தரராஜன்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



