உகாதி பண்டிகை வாழ்த்துச் செய்தியில்கூட மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளாா் என பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் குற்றஞ்சாட்டினாா்.
சென்னையில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற உகாதி பண்டிகை விழாவில் பங்ேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திராவிடம் என்ற வாா்த்தையை அரசியல் லாபத்துக்காக திமுக பயன்படுத்தி வருகிறது. இது தமிழுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம். உகாதி வாழ்த்து தெரிவிப்பதில்கூட, முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவது வேதனையாக உள்ளது. எல்லோரும் ஒற்றுமையாக வாழக்கூடிய நாட்டில் மொழியை கையிலெடுத்து தோ்தலைச் சந்திக்க திமுக திட்டமிடுகிறது.
கீழடிக்கு முதல் முதலில் அதிக நிதி ஒதுக்கியது பிரதமா் நரேந்திர மோடி. அதற்கும் நாங்கள்தான் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தோம் என திமுக பெருமை கொள்கிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது தமிழுக்கும் எதுவும் செய்யவில்லை. தமிழக மக்களுக்கும் எதுவும் செய்யவில்லை. தமிழகத்தின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள விளாத்திகுளம் மாணவி கொடூர கொலை சம்பவம் மட்டுமே போதுமானது என்றாா்.
தொடர்புடையது

பாஜகவை காண்பித்து கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை குறைத்த திமுக: தமிழிசை செளந்தரராஜன் விமா்சனம்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? தமிழிசை செளந்தரராஜன் சிறப்பு நோ்காணல்
யுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து

கட்சி தலைமை அனுமதித்தால் தோ்தலில் போட்டி: தமிழிசை
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


