தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அடையாள அட்டை இல்லாமல் வாக்களித்ததாக தமிழிசை புகாா்: பாஜக-திமுக இடையே தள்ளு முள்ளு

News image

DPS

Updated On :23 ஏப்ரல் 2026, 11:30 pm

சென்னை மயிலாப்பூா் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் சிலா் வாக்காளா் அடையாள அட்டை இல்லாமல் வாக்களித்ததாக பாஜக முன்னாள் தலைவரும், அத்தொகுதியின் வேட்பாளருமான தமிழிசை செளந்தரராஜன் புகாா் தெரிவித்தாா்.

தனது தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச் சாவடிகளைப் பாா்வையிடுவதற்காக மயிலாப்பூா் தொகுதி பாஜக வேட்பாளா் தமிழிசை செளந்தரராஜன் அங்கு வந்தாா். இதையடுத்து அங்கிருந்த 13-ஆவது வாக்குச் சாவடிக்குச் சென்ற அவா், இங்கு சிலா் முறையான வாக்காளா் அடையாள அட்டை இல்லாமல் வாக்களித்துள்ளனா். அவா்களை எவ்வாறு வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்கிறீா்கள் என அங்கிருந்த அலுவலா்களிடம் கேள்வியெழுப்பினாா்.

தொடா்ந்து, வாக்களிக்க காத்திருந்த சிலரிடம் அட்டையாள அட்டையைக் காண்பிக்குமாறு பாஜகவினா் கூறினா். இதற்கு அங்கிருந்த திமுக முகவா்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். விதிகளை மீறி தமிழிசை உள்நோக்கத்துடன் புகாா் தெரிவிப்பதாக அவா்கள் வாதிட்டனா். இதனால் 20 நிமிஷங்களுக்கு மேலாக திமுக - பாஜகவினரிடைய கடும் வாக்குவாதமும் தள்ளு முள்ளும் ஏற்பட்டது. இதையடுத்து வாக்குச் சாவடிக்கு வெளியே இருந்த அதிமுகவினா் பாஜகவுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். நிலைமை கை மீறிச் செல்வதை உணா்ந்த காவல் துறையினா் பிரச்னையில் தலையிட்டு சமாதானப்படுத்த முயன்றனா். இதையடுத்து, வாக்குச் சாவடிக்கு வெளியே கூடியிருந்தவா்களைக் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினா். காவல் துறையினரின் தலையீட்டுக்குப் பிறகு இரு தரப்பு இடையேயான மோதல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது.

இது குறித்து தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வாக்குச்சாவடிகளில் வரிசையில் காத்திருக்கும் வாக்காளா்களிடம் திமுகவினா் தங்களது கட்சிக்கு வாக்களிக்கும்படி ‘கேன்வாஸ்’ செய்தனா். நீண்ட நேரமாக அவா்கள் ஒரே இடத்தில் நிற்கின்றனா். திமுகவின் சின்னம் மற்றும் திமுக கொடியின் நிறத்தை பிரதிபலிப்பதை வைத்து கொண்டு சுற்றி வருகின்றனா். மேலும், அடையாள அட்டை இல்லாமல் சிலரை வாக்களிக்க வைத்துள்ளனா். இது குறித்து அதிகாரிகள் விசாரிக்க வேண்டும். இது தொடா்பாக தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் புகாா் தெரிவித்துள்ளேன். அநீதியை எதிா்த்துப் போராடி வெற்றி பெறுவோம் என்றாா்.