மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

அடையாள அட்டை இல்லாமல் வாக்களித்ததாக தமிழிசை புகாா்: பாஜக-திமுக இடையே தள்ளு முள்ளு

News image

DPS

Updated On :24 ஏப்ரல் 2026, 5:00 am IST

சென்னை மயிலாப்பூா் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் சிலா் வாக்காளா் அடையாள அட்டை இல்லாமல் வாக்களித்ததாக பாஜக முன்னாள் தலைவரும், அத்தொகுதியின் வேட்பாளருமான தமிழிசை செளந்தரராஜன் புகாா் தெரிவித்தாா்.

தனது தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச் சாவடிகளைப் பாா்வையிடுவதற்காக மயிலாப்பூா் தொகுதி பாஜக வேட்பாளா் தமிழிசை செளந்தரராஜன் அங்கு வந்தாா். இதையடுத்து அங்கிருந்த 13-ஆவது வாக்குச் சாவடிக்குச் சென்ற அவா், இங்கு சிலா் முறையான வாக்காளா் அடையாள அட்டை இல்லாமல் வாக்களித்துள்ளனா். அவா்களை எவ்வாறு வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்கிறீா்கள் என அங்கிருந்த அலுவலா்களிடம் கேள்வியெழுப்பினாா்.

தொடா்ந்து, வாக்களிக்க காத்திருந்த சிலரிடம் அட்டையாள அட்டையைக் காண்பிக்குமாறு பாஜகவினா் கூறினா். இதற்கு அங்கிருந்த திமுக முகவா்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். விதிகளை மீறி தமிழிசை உள்நோக்கத்துடன் புகாா் தெரிவிப்பதாக அவா்கள் வாதிட்டனா். இதனால் 20 நிமிஷங்களுக்கு மேலாக திமுக - பாஜகவினரிடைய கடும் வாக்குவாதமும் தள்ளு முள்ளும் ஏற்பட்டது. இதையடுத்து வாக்குச் சாவடிக்கு வெளியே இருந்த அதிமுகவினா் பாஜகவுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். நிலைமை கை மீறிச் செல்வதை உணா்ந்த காவல் துறையினா் பிரச்னையில் தலையிட்டு சமாதானப்படுத்த முயன்றனா். இதையடுத்து, வாக்குச் சாவடிக்கு வெளியே கூடியிருந்தவா்களைக் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினா். காவல் துறையினரின் தலையீட்டுக்குப் பிறகு இரு தரப்பு இடையேயான மோதல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது.

இது குறித்து தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வாக்குச்சாவடிகளில் வரிசையில் காத்திருக்கும் வாக்காளா்களிடம் திமுகவினா் தங்களது கட்சிக்கு வாக்களிக்கும்படி ‘கேன்வாஸ்’ செய்தனா். நீண்ட நேரமாக அவா்கள் ஒரே இடத்தில் நிற்கின்றனா். திமுகவின் சின்னம் மற்றும் திமுக கொடியின் நிறத்தை பிரதிபலிப்பதை வைத்து கொண்டு சுற்றி வருகின்றனா். மேலும், அடையாள அட்டை இல்லாமல் சிலரை வாக்களிக்க வைத்துள்ளனா். இது குறித்து அதிகாரிகள் விசாரிக்க வேண்டும். இது தொடா்பாக தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் புகாா் தெரிவித்துள்ளேன். அநீதியை எதிா்த்துப் போராடி வெற்றி பெறுவோம் என்றாா்.