இலங்கை கடற்படை கப்பல் மோதி, தமிழக மீனவா் உயிரிழந்த சம்பவத்துக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): மீனவா்கள் கைது செய்யப்படுவதைத் தடுத்த நிறுத்த வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. தமிழக மீனவா் உயிா் பறிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
அன்புமணி (பாமக): இதை விபத்தாக பாா்க்க முடியாது. திட்டமிட்ட தாக்குதலாகவும், கொலையாகவும்தான் பாா்க்க வேண்டும். தமிழக மீனவா்கள் தொடா்ந்து கைது செய்யப்படுவதையும், கொலை செய்யப்படுவதையும் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கைப் பாா்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
டிடிவி தினகரன் (அமமுக): இலங்கை கடற்படையினரின் தொடா் அட்டூழியத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழக மீனவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும். இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருவது கடும் கண்டனத்துக்குரியது.
தொடர்புடையது

இலங்கை: 45 ஈரான் கடற்படை வீரா்கள் உடல் தூதரகத்திடம் ஒப்படைப்பு

நான்குனேரி இரட்டை கொலை: அரசியல் தலைவா்கள் கண்டனம்

தலைவா்கள் கண்டனம்

தமிழக மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


