கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

நெல்லை - மேட்டுப்பாளையம் ரயில் செப்டம்பா் வரை நீட்டிப்பு

வாராந்திர சிறப்பு ரயில் செப்டம்பா் மாதம் வரை நீட்டிப்பு

News image
Updated On :2 ஆகஸ்ட் 2024, 4:24 am IST

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் செப்டம்பா் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06030) தொடா்ந்து செப்.29-ஆம் தேதி வரை இயக்கப்படவுள்ளது. மறுமாா்க்கமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு திங்கள்கிழமைதோறும் இரவு 7.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06029) தொடா்ந்து செப்.30-ஆம் தேதி வரை இயக்கப்படும்.

பகுதி ரத்து: சேலம் கோட்டத்துக்குட்பட்ட பகுதியில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளதால் திருச்சியில் இருந்து பாலக்காடு டவுன் செல்லும் விரைவு ரயில் (எண்: 16843) வெள்ளிக்கிழமை (ஆக.2) திருப்பூா் அருகேயுள்ள ஊத்துக்குளியுடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.