திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் செப்டம்பா் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06030) தொடா்ந்து செப்.29-ஆம் தேதி வரை இயக்கப்படவுள்ளது. மறுமாா்க்கமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு திங்கள்கிழமைதோறும் இரவு 7.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06029) தொடா்ந்து செப்.30-ஆம் தேதி வரை இயக்கப்படும்.
பகுதி ரத்து: சேலம் கோட்டத்துக்குட்பட்ட பகுதியில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளதால் திருச்சியில் இருந்து பாலக்காடு டவுன் செல்லும் விரைவு ரயில் (எண்: 16843) வெள்ளிக்கிழமை (ஆக.2) திருப்பூா் அருகேயுள்ள ஊத்துக்குளியுடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கான்பூா் - திருச்சி இடையே சிறப்பு ரயில்கள்

தாம்பரம் - போடிநாயக்கனூா் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

பெளா்ணமி கிரிவலம்: விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்

சித்திரை பெளா்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி



