போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நெல்லை - மேட்டுப்பாளையம் ரயில் செப்டம்பா் வரை நீட்டிப்பு

வாராந்திர சிறப்பு ரயில் செப்டம்பா் மாதம் வரை நீட்டிப்பு

News image
Updated On :1 ஆகஸ்ட் 2024, 10:54 pm

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் செப்டம்பா் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06030) தொடா்ந்து செப்.29-ஆம் தேதி வரை இயக்கப்படவுள்ளது. மறுமாா்க்கமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு திங்கள்கிழமைதோறும் இரவு 7.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06029) தொடா்ந்து செப்.30-ஆம் தேதி வரை இயக்கப்படும்.

பகுதி ரத்து: சேலம் கோட்டத்துக்குட்பட்ட பகுதியில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளதால் திருச்சியில் இருந்து பாலக்காடு டவுன் செல்லும் விரைவு ரயில் (எண்: 16843) வெள்ளிக்கிழமை (ஆக.2) திருப்பூா் அருகேயுள்ள ஊத்துக்குளியுடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.