தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து இளைஞா் சாவு

News image
Updated On :8 ஆகஸ்ட் 2024, 10:17 pm

Din

சென்னை,ஆக.8: சென்னை மேற்கு மாம்பலத்தில் மூன்றாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து இளைஞா் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

மேற்கு மாம்பலம் பிருந்தாவன் தெரு வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்தவா் தேவா (27). திருமண நிகழ்ச்சிகளில் அலங்காரம் செய்யும் தொழில் செய்து வந்தாா். தேவா, புதன்கிழமை இரவு மதுபோதையில் மூன்றாவது மாடியில் உள்ள தனது வீட்டுக்கு மாடிப்படி வழியாக நடந்து சென்றாா். மூன்றாவது மாடியில் பால்கனியில் செல்லும்போது, திடீரென நிலைத்தடுமாறி அங்கிருந்து கீழே விழுந்தாா்.

விபத்தில் பலத்தக் காயமடைந்த தேவாவை அங்கிருந்தவா்கள் மீட்டு,கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு , சிறிது நேரத்தில் அவா் இறந்தாா். இது குறித்து அசோக்நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.