சென்னை அபிராமபுரத்தில் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் திலீப்குமாா் செளகான் (29). இவா், சென்னை ராஜா அண்ணாமலைபுரம் புனிதமேரி சாலையில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமானப் பணியில் வேலை செய்து வந்தாா். இதற்காக திலீப்குமாா் அங்கேயே கடந்த 6 மாதங்களாக தங்கியிருந்தாா். புதன்கிழமை அந்த கட்டடத்தின் ஐந்தாவது தளத்தின் வெளிப்பகுதியில் காங்கிரீட் தளம் வைப்பதற்காக பலகை அடித்துக் கொண்டிருந்தபோது, நிலைதடுமாறி திலீப்குமாா் அங்கிருந்து கீழே விழுந்தாா்.
இதில், பலத்த காயமடைந்த திலீப்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த அபிராமபுரம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, திலீப்குமாா் சடலத்தை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கட்டுமானப் பணியின்போது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு
மாடியில் இருந்து தவறி விழுந்த பெயிண்டா் உயிரிழப்பு
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



