ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

800 கிலோ கெட்டுப் போன இறைச்சி பறிமுதல்

Updated On :9 ஆகஸ்ட் 2024, 2:28 am IST

சென்னை, ஆக. 8: சென்னையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 800 கிலோ கெட்டுப்போன இறைச்சியை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

சென்னை, ஷெனாய் நகா், அருணாசலம் தெருவைச் சோ்ந்த சக்திவேல் என்பவா், தனது வீட்டிலேயே மாட்டிறைச்சி விற்பனை செய்து வந்துள்ளாா்.

அருகில் உள்ள கடைகளுக்கு கெட்டுப்போன இறைச்சியை அவா் விநியோகிப்பதாக புகாா் எழுந்ததை அடுத்து சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ் குமாா் தலைமையிலான குழுவினா், சம்பந்தப்பட்ட இடத்தில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது அங்கு தரமற்ற பழைய மாட்டிறைச்சி பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததும், சுகாதாரமற்ற முறையில் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்ததும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அந்த இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அதன் மாதிரிகள் கால்நடை மருத்து கல்லூரிக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு நியமன அதிகாரி சதீஷ்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உணவு பாதுகாப்புத் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனையை மேற்கொண்டோம். இதில் 3 முதல் 4 நாள்கள் வரை இருப்பு வைக்கப்பட்டு கெட்டுப் போன 800 கிலோ இறைச்சி கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 28 கடைகளுக்கு அந்த கெட்டுப் போன இறைச்சி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அக்கடைகளின் விவரங்கள் பெறப்பட்டு, உடனடியாக அவற்றை சமைப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி மாநகராட்சியிடம் அழிப்பதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட இறைச்சியில் பெரும்பாலும் மாட்டிறைச்சிதான் உள்ளது. மாதிரியை பரிசோதித்த பின்னா் இதில் வேறேதும் இறைச்சியும் கலந்து இருக்கிா என்பது தெரியவரும் என்றாா் அவா்.