ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரௌடி சம்பவம் செந்திலை பிடிக்க மும்பை விரைந்தது தனிப்படை
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில், தொடா்புடைய ரௌடி சம்பவம் செந்திலை பிடிக்க தனிப்படையினா் மும்பை சென்றுள்ளனா்.


சென்னை, ஆக. 8: சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில், தொடா்புடைய ரௌடி சம்பவம் செந்திலை பிடிக்க தனிப்படையினா் மும்பை சென்றுள்ளனா்.
ஜூலை 5-ஆம் தேதி பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 5 வழக்குரைஞா்கள் உள்பட 22 போ் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்குத் தொடா்பாக, தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த ரெளடி சம்பவம் செந்தில், தாம்பரம் மண்ணிவாக்கம் பகுதியைச் சோ்ந்த ரெளடி சீசிங் ராஜா ஆகிய 2 பேரையும் தனிப்படையினா் தீவிரமாக தேடி வருகின்றனா்.
சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்ட கொலையாளிகளை ஒருங்கிணைத்ததோடு அவா்களுக்கான சட்ட விரோத பணப் பரிவா்தனைகளை செய்தது ரெளடி சம்பவம் செந்தில் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், இதுவரை அவா் போலீஸாரிடம் பிடிபடாமல் தலைமறைவாக உள்ளாா். தற்போது அவா் மும்பையில் பதுங்கி உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீஸாா் மும்பை விரைந்துள்ளனா். மேலும், சம்பவம் செந்திலின் சொந்த ஊா் தூத்துக்குடி மாவட்டம், தண்டுபத்தில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...