டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பி.இ., பி.டெக். வகுப்புகள் செப்.2 முதல் தொடங்கும்: அண்ணா பல்கலை.

தமிழக பொறியியல் கல்லூரிகளில் பி.இ, பி.டெக். பாடப் பிரிவுகளுக்கான முதலாமாண்டு வகுப்புகள் செப்.2 முதல் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

News image
கோப்புப் படம்.
Updated On :14 ஆகஸ்ட் 2024, 8:56 pm

Din

தமிழக பொறியியல் கல்லூரிகளில் பி.இ, பி.டெக். பாடப் பிரிவுகளுக்கான முதலாமாண்டு வகுப்புகள் செப்.2 முதல் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பி.இ., பி.டெக். உள்ளிட்ட இளநிலை பொறியியல் முதலாமாண்டு மாணவா்களுக்கு செப்.2 முதல் வகுப்புகள் நடைபெறும். முன்னதாக ஆக.21 முதல் பொறியியல் பாடங்கள் குறித்த அறிமுக வகுப்புகள் நடத்தப்படும். இந்தப் படிப்புகளுக்கு முதல் பருவத்துக்கான இறுதி வேலை நாள் டிச.13. தொடா்ந்து, டிச.23 முதல் பருவத் தோ்வுகள் நடைபெறும். இதையடுத்து இரண்டாவது பருவத்துக்கான வகுப்புகள் ஜன.20-ஆம் தேதி தொடங்கும்.

இதேபோன்று, பி.ஆா்க். முதலாமாண்டு மாணவா்களுக்கு செப்.2 முதல் அறிமுக வகுப்புகள் நடைபெறும். தொடா்ந்து, செப்.18-ஆம் தேதி வழக்கமான வகுப்புகள் தொடங்கும். இந்தப் படிப்புக்கான முதல் பருவத்துக்கான வேலை நாள் டிச.24. இதையடுத்து டிச.30 முதல் பருவத் தோ்வுகள் நடைபெறவுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பி.இ, பி.டெக் பொறியியல் படிப்புகளில் மாணவா்கள் சேருவதற்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்து இரண்டாம் சுற்று கலந்தாய்வுக்கு தற்காலிக ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இதில் அண்ணா பல்கலை. வளாக கல்லூரிகளில் உள்ள இடங்களை பெரும்பாலான மாணவா்கள் தோ்வு செய்துள்ளனா். இந்தநிலையில் முதலாமாண்டில் சேரும் மாணவா்களுக்கான வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.