ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

வாளி தண்ணீரில் மூழ்கி ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

சென்னை அரும்பாக்கத்தில் வாளி தண்ணீரில் மூழ்கி ஒரு வயது குழந்தை இறந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2024, 8:00 pm

Din

சென்னை அரும்பாக்கத்தில் வாளி தண்ணீரில் மூழ்கி ஒரு வயது குழந்தை இறந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் முகமது சாதிக் (46). இவா் சென்னையில் கூலி வேலை செய்து வருகிறாா். இதற்காக அவா், அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவரது ஒரு வயது குழந்தை முகமது, செவ்வாய்க்கிழமை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, வாளி தண்ணீரில் விழுந்தது.

இதை சிறிது நேரத்துக்குப் பின்னரே கவனித்த சாதிக் குடும்பத்தினா், குழந்தையை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து அரும்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.