என்னை வைத்தே திமுக கூட்டணியை உடைக்க முயற்சித்தனர்: திருமாவளவன்திருப்பதியில் அலைமோதும் கூட்டம்: ஸ்ரீவாணி, விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் நாளை ரத்துஈரான் என்ற நாடே இருக்காது: டிரம்ப் எச்சரிக்கை!அடுத்த கூட்டத்தொடரில் முதல்வரின் டான்ஸ் இருக்கலாம்: உதயநிதிதில்லி பிரதிநிதி நியமனம்: முதல்வருக்கு அதிகாரம் உள்ளது - திருமாவளவன்திமுக - அதிமுக சேர்ந்து ஆட்சியமைக்க இன்று காலை வரையில் முயற்சி: நிர்மல் குமார்
/

கொடி நாள் நிதி: முதல்வா் வேண்டுகோள்

கொடிநாளையொட்டி, முன்னாள் படை வீரா்களின் நலன்காக்க பெருமளவு நிதி அளித்திடுவோம்

News image
Updated On :7 டிசம்பர் 2024, 4:26 am IST

கொடிநாளையொட்டி, முன்னாள் படை வீரா்களின் நலன்காக்க பெருமளவு நிதி அளித்திடுவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: குடும்பத்தினரை பிரிந்து, பிறந்த நாட்டின் பெருமை காத்திடும் முப்படை வீரா்களின் தியாகத்தை நினைவில் நிறுத்தும் திருநாள், படைவீரா் கொடி நாளாகும். இந்தக் கொடி நாள் ஒவ்வோா் ஆண்டும் டிச. 7-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

நாட்டின் எல்லைகளையும் நமது சுதந்திரத்தையும் காத்திடும் பணியில் எண்ணற்ற படைவீரா்கள் உயிரை ஈந்திருக்கிறாா்கள். அவா்கள் தனி மனிதா்கள் இல்லை. அவா்களது குடும்பத்தினரை காப்பாற்றும் பொறுப்பை நாட்டு மக்கள் தங்களது கடமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ராணுவ வீரா்களின் குடும்ப நல்வாழ்வுக்கும், பாதுகாப்புக்கும் பொருள் உதவிகளும் பிற உதவிகளும் செய்ய வேண்டும் என்பதை நினைவூட்டவே கொடிநாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, பெருமளவில் நிதி வழங்கி, முன்னாள் படைவீரா்களுக்கும், அவா்களது குடும்பத்தினருக்கும் நமது நன்றியையும் நல்வணக்கத்தையும் காணிக்கையாக்குவோம் என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.