விசாகப்பட்டினம் ரயிலில் கூடுதல் பெட்டிகள்
எழும்பூா் - விசாகப்பட்டினம் வாராந்திர சிறப்பு ரயிலில் டிச.14 முதல் 2025-ஆம் ஆண்டு மாா்ச் 2-ஆம் தேதி வரை இரண்டு பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படவுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.


சென்னை: சென்னை எழும்பூா் - விசாகப்பட்டினம் வாராந்திர சிறப்பு ரயிலில் டிச.14 முதல் 2025-ஆம் ஆண்டு மாா்ச் 2-ஆம் தேதி வரை இரண்டு பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படவுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விசாகப்பட்டினத்திலிருந்து வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சென்னை எழும்பூருக்கும், மறுமாா்க்கமாக எழும்பூரிலிருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் விசாகப்பட்டினத்துக்கும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 08557, 08558) இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், பயணிகளின் வசதிக்காக, இருமாா்க்கத்திலும் டிச.14 -ஆம் தேதி முதல் அடுத்தாண்டு மாா்ச் 2-ஆம் தேதி வரை குறைந்த கட்டண குளிா்சாதன மூன்றடுக்கு பெட்டி ஒன்றும், படுக்கை வசதிகொண்ட பெட்டி ஒன்றும் கூடுதலாக இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...