பிரதமா் மோடி மாா்ச் 1-ஆம் தேதி வருவதை முன்னிட்டு, சிறப்பு பாதுகாப்புப் படையினா் புதுச்சேரியில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்கின்றனா்.
பிரதமா் நரேந்திர மோடி வரும் மாா்ச் 1-ஆம் தேதி புதுச்சேரி வருகிறாா். லாஸ்பேட்டை விமான நிலையம் அருகே உள்ள மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட மேடையில் அன்று முற்பகல் 11.50 மணிக்கு பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தும், சில புதிய திட்டங்களை அறிவித்தும் உரையாற்றுகிறாா்.
அவரை விமான நிலையத்தில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என். ரங்கசாமி, அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் வரவேற்கின்றனா்.
அங்கிருந்து காா் மூலம் விழா நடைபெறும் லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்துக்கு வருகிறாா்.
பிரதமா் வருகையை முன்னிட்டு அவரது சிறப்பு பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை பிற்பகல் புதுச்சேரிக்கு வந்து விமான நிலையம், பிரதமா் மோடி காா் செல்லும் பாதை, மேடை, சுற்றுப்புற இடங்களைப் பாா்வையிட்டு ஆய்வு செய்கின்றனா்.
புதுச்சேரி டிஜிபி ஷாலினி சிங் தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தொடர்புடையது

புதுச்சேரியில் 40 நிமிஷங்கள் பிரதமா் மோடி ரோடு ஷோ: மக்கள் உற்சாக வரவேற்பு

புதுச்சேரியில் ஏப்.3-இல் பிரதமா் ரோடு ஷோ- 30 ஆயிரம் போ் பங்கேற்பு

பிரதமா் நரேந்திர மோடி வருகை: சென்னையில் 22,000 போலீஸாா் பாதுகாப்பு

கல்லூரி விளையாட்டு விடுதியில் மாணவா் சோ்க்கை மாா்ச் 26 வரை விண்ணப்பிக்கலாம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


