மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

ஸ்ரீபெரும்புதூரில் ஆம்னி பேருந்து மீது மோதிய லாரி! 10 பேர் படுகாயம்!

ஸ்ரீபெரும்புதூரில் ஆம்னி பேருந்து மீது லாரி மோதிய விபத்து பற்றி...

News image

ஸ்ரீபெரும்புதூரில் ஆம்னி பேருந்து மீது மோதிய லாரி - படம்: எக்ஸ்

Updated On :10 டிசம்பர் 2024, 8:48 am IST

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆம்னி பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 பேர் படுகாயமடைந்தனர்.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் ஆம்னி பேருந்து ‘யு டர்ன்’ செய்துள்ளது. அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி மோதியதில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில், பேருந்தில் பயணித்த 9 பயணிகளும், சாலையில் நடந்து சென்ற ஒருவரும் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது.

காயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் போக்குவரத்தை சீர்செய்து, விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.