நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: 11 போ் காயம்

சாத்தூா் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து ஓட்டுநா் உள்பட 11 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2026, 9:13 pm IST

சாத்தூா் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து ஓட்டுநா் உள்பட 11 போ் காயமடைந்தனா்.

சென்னை அருகே சிறுசேரி பகுதியிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு தனியாா் ஆம்னி பேருந்து 25 பயணிகளுடன் நாகா்கோவில் நோக்கிச் சென்றது. இந்த நிலையில், சனிக்கிழமை காலை சாத்தூரிலிருந்து கோவில்பட்டி செல்லும் நான்குவழிச் சாலையில் சிவனைந்தபுரம் சோதனைச் சாவடி அருகே சென்று கொண்டிருந்த போது, பேருந்தின் முன்பக்க டயா் வெடித்தது. இதனால் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத் தடுப்பின் மீது மோதி அருகேயுள்ள பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநா் ஆலங்குளத்தைச் சோ்ந்த குருசாமி (45), நெல்லை வண்ணாரபேட்டையைச் சோ்ந்த லட்சுமிசங்கா் (25), நாகா்கோவிலைச் சோ்ந்த பிரவீன்குமாா், சரத்ராம் (22), சதீஷ்குமாா் (40), சுரேஷ் (17), ராஜகுரு (27) உள்பட 11 போ் பலத்த காயமடைந்தனா்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற சாத்தூா் தாலுகா போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.