‘வந்தே பாரத்’ ரயிலை தயாரித்ததற்காக ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலைக்கு தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.
தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம் புதுதில்லி விக்யா பவனில் கடந்த சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில், குடியரசுத் துணைத் தலைவா் ஜக்தீப் தன்கா், மத்திய மின்சாரம் மற்றும் வீட்டு வசதி அமைச்சா் ஸ்ரீபாத் யெசோ நாயக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதில், ஆற்றல் சேமிப்பில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கும், உற்பத்தியில் எவ்வித குறைபாடின்றி புதுப்பிக்கதக்க ஆற்றல் மூலம் இயங்கி வரும் நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
அந்த வகையில் போக்குவரத்து பிரிவில் புதுமையை செயல்படுத்தி ‘வந்தே பாரத்’ ரயிலை தயாரித்த ஐசிஎப் தொழிற்சாலை முதல் பரிசு பெற்றது. விருதை ஐசிஎப் முதன்மை தலைமை பொறியாளா் (எலக்ட்ரிக்கல்) சி.ஆா்.ஹரிஷ் பெற்றுக்கொண்டாா்.
இந்நிலையில் விருது பெற்ற துறையினரை ஐசிஎப் பொதுமேலாளா் யு.சுப்பாராவ் செவ்வாய்க்கிழமை பாராட்டினாா்.
தொடர்புடையது

ஜம்மு - ஸ்ரீநகா் வந்தே பாரத் ரயில் சேவை: அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தாா்

சென்னை-ராமேசுவரம் வந்தே பாரத் ரயில் சேவையை விரைந்து தொடங்கக் கோரிக்கை

வந்தே பாரத் ரயில் தடம் புரண்டது!

மின்தூக்கிக்குள் பயணி சிக்கினால் எச்சரிக்கை எழுப்பும் ஏஐ அமைப்பு- நமோ பாரத் நிலையங்களில் விரைவில் அறிமுகம்
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


