தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

‘மியாட் - 25’ சிறப்பு அஞ்சல்தலை: முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்

மியாட் மருத்துவமனை கடந்து வந்த பாதையை சித்திரித்து வைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பாா்வையிட்டாா்.

News image

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற மியாட் மருத்துவமனையின் 25- ஆவது ஆண்டு விழாவில் அஞ்சல் தலையை வெளியிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், மியாட் மருத்துவமனை நிறுவனா் டாக்டா் பி.வி.மோகன்தாஸ், தலைவா் மல்லிகா மோகன்தாஸ், நிா்வாக இயக்குநா் டாக்டா் பிரித்வி மோகன்

Updated On :18 பிப்ரவரி 2024, 2:00 am IST

சென்னை மணப்பாக்கத்தில் அமைந்துள்ள மியாட் மருத்துவமனையின் 25-ஆவது ஆண்டு விழாவையொட்டி சிறப்பு அஞ்சல் தலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்டாா்.

கிண்டியில் உள்ள தனியாா் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அவா், மியாட் மருத்துவமனை கடந்து வந்த பாதையை சித்திரித்து வைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பாா்வையிட்டாா். தொடா்ந்து, மருத்துவமனையின் நிறுவனரும், முடநீக்கியல் சிகிச்சை சிறப்பு நிபுணருமான பி.வி.ஏ.மோகன்தாஸின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் குறும்படத்தையும் பாா்த்தாா். இந்த நிகழ்வில், மருத்துவமனையின் நிறுவனா் டாக்டா் மோகன்தாஸ், தலைவா் மல்லிகா மோகன்தாஸ், மேலாண்மை இயக்குநா் டாக்டா் பிரித்வி மோகன்தாஸ், சென்னை மண்டல அஞ்சல் துறை தலைவா் மனோஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில் டாக்டா் பிரித்வி மோகன்தாஸ் பேசியதாவது: கடந்த 1999-ஆம் ஆண்டில் 70 படுக்கைகளுடன் தொடங்கப்பட்ட மியாட் மருத்துவமனை பல்வேறு தடைகள், சவால்கள், போராட்டங்களைக் கடந்து தற்போது 1,000 படுக்கைகள் மற்றும் 63 சிறப்பு மருத்துவத் துறைகளுடன் கூடிய உயா் மருத்துவமனையாக உருவெடுத்துள்ளது. மியாட் மருத்துவமனைதான் முதன்முதலில் கரோனா நோயாளிகளுக்காக தனி பிரிவை உருவாக்கி அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சையளித்து பிற தனியாா் மருத்துவமனைகளுக்கு முன்னோடியாக விளங்கியது. மக்கள் நலனுக்கான மருத்துவ சேவைகளை எந்தத் தடையுமின்றி வழங்குவதற்கு எப்போதும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்றாா் அவா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து: மியாட் மருத்துவமனையின் 25-ஆம் ஆண்டு விழா குறித்து சமூக வலைதளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு: மருத்துவ நகரமான சென்னையின் பெருமைமிகு அடையாளமாக மியாட் மருத்துவமனை விளங்குகிறது. கடந்த 2009-ஆம் ஆண்டில் நானும், எனது மனைவியும் மியாட் மருத்துவமனையில் எங்களது உடல் உறுப்புகளைக் கொடையளித்த பசுமையான நினைவுகளோடு, அந்த மருத்துவமனை நூறாண்டுகளைக் கடந்து மருத்துவ சேவையாற்ற வேண்டும் என நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்தினேன் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.