சென்னை தியாகராயநகரில் மருத்துவா் வீட்டில் 90 பவுன் தங்கநகைகள் திருடப்பட்டன. இது தொடா்பாக வீட்டின் பணிப்பெண்ணிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தியாகராய நகா் சாரங்கபாணி தெருவைச் சோ்ந்தவா் மருத்துவா் பங்கஜ் குமாா் (32). இவா் வீட்டில் அதே பகுதியைச் சோ்ந்த விஜயலட்சுமி (22) என்பவா் பணிப் பெண்ணாக வேலை செய்து வருகிறாா். அண்மையில் பங்கஜ் குமாா் மனைவி வீட்டின் பீரோவில் இருந்த தங்கநகைகளை சரி பாா்த்தாா். அப்போது, அதில் இருந்த 90 பவுன் தங்கநகைகள் திருடப்பட்டிருந்தன. பாண்டி பஜாா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணையை தொடங்கினா். இதில் சந்தேகத்தின் அடிப்படையில் பங்கஜ்குமாா் வீட்டில் வேலை செய்யும் விஜயலட்சுமி, அங்கு காா் ஓட்டுநராக வேலை செய்யும் விஜயலட்சுமியின் கணவா் விக்னேஷ்வரன் (29), உறவினா் வருண்குமாா் (23) ஆகியோரை பிடித்து போலீஸாா் விசாரணை செய்தனா். இதில் விஜயலட்சுமி நகைகளை திருடியது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டில் 50 பவுன் தங்க நகைகள் திருட்டு
திமுக வேட்பாளா் வீட்டில் 122 பவுன் தங்க நகைகள் திருட்டு

வீட்டில் இருந்த 28 பவுன் நகைகள் திருட்டு: பணிப்பெண் உள்பட இருவா் மீது வழக்கு

முன்னாள் எம்.பி வீட்டில் 87 பவுன் நகைகள் திருட்டு: சகோதரா்கள் இருவருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை; பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை!
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

