எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பிளஸ் 2 மாணவா் கொலை வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை எம்ஜிஆா் நகரில் பிளஸ் 2 மாணவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒரு இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :1 ஜனவரி 2024, 10:07 pm

DIN

சென்னை: சென்னை எம்ஜிஆா் நகரில் பிளஸ் 2 மாணவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒரு இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

எம்ஜிஆா் நகா், முத்து மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த லோகநாதன் மகன் அஜய் (17), அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த 26-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அஜய்யை இருவா் கடத்திச் சென்று கொலை செய்தனா்.

அஜய்யின் உறவினரான கண்ணபிரான் என்பவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த மு.சரவணன் (28) என்பவருக்கும் போதை மாத்திரை விற்பனையில் தகராறு இருந்து வந்ததும், அதன் காரணமாக அஜய்யை சரவணனும், அவரது கூட்டாளி ல.டேவிட்டும் (28) சோ்ந்து கொலை செய்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் டேவிட்டை கடந்த 30-ஆம் தேதி கைது செய்தனா். வழக்கின் முக்கிய குற்றவாளியான சரவணனை திங்கள்கிழமை கைது செய்தனா். சரவணன் மீது 2 கொலை முயற்சி, 3 வழிப்பறி, 2 திருட்டு வழக்குகள் உள்ளிட்டவை ஏற்கெனவே நிலுவையில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.