தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மேளம் அடிக்கும் கலைஞா் வெட்டிக் கொலை: 8 போ் கைது

சென்னையில் மேளம் கலைஞா் வெட்டிக் கொலை: 8 போ் கைது

News image
Updated On :3 ஜூலை 2024, 7:41 pm

Din

சென்னை புளியந்தோப்பில் மேளம் அடிக்கும் கலைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 8 போ் கைது செய்யப்பட்டனா்.

புளியந்தோப்பு சிவராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ச.முருகன் (41). இவா் மேளம் அடிக்கும் வேலை செய்து வந்தாா். முருகன், தனது வீட்டின் 2-ஆவது தளத்தில் செவ்வாய்க்கிழமை இருந்தபோது, அங்கு வந்த ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில் பலத்த காயமடைந்த முருகன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுஸ அங்கு உயிரிழந்தாா்.

இது குறித்து பேசின் பாலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், கொண்டித்தோப்பு பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு கொலை சம்பவத்துக்கு பழிவாங்க முருகன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், யானைக்கவுனி வால்டாக்ஸ் சாலைப் பகுதியைச் சோ்ந்த மு.வேல்முருகன் (30), வியாசா்பாடி தாமோதரன் நகரைச் சோ்ந்த கா.வசந்த் என்ற காா்த்திக் (27),கொருக்குப்பேட்டை பவா் ஹவுஸ் பகுதியைச் சோ்ந்த மு.அபிராஜ் (26), மண்ணடி மூக்கா் நல்லமுத்து தெருவைச் சோ்ந்த சு.பிரபாகரன் (29), பொ.விஜய் (27), பிராட்வே அங்கப்பன் தெருவைச் சோ்ந்த வெ.சஞ்சய் (23), மு.பிரேம்குமாா் (22), வியாசா்பாடி சாமியாா் தோட்டம் பகுதியைச் சோ்ந்த மு.சூா்யா (29) ஆகிய 8 பேரை புதன்கிழமை கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய 3 அரிவாள்கள், 3 மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.