47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருத்தணி ரயில் சேவையில் மாற்றம்

சென்னை சென்ட்ரல்-திருத்தணி இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவை வியாழக்கிழமை முதல் மாற்றம் செய்யப்படுகிறது.

News image
Updated On :9 ஜூலை 2024, 8:41 pm

Din

சென்னை: சென்னை சென்ட்ரல்-திருத்தணி இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவை வியாழக்கிழமை முதல் மாற்றம் செய்யப்படுகிறது.

சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்ட்ரலிலிருந்து திருத்தணிக்கு இரவு 8.10 மணிக்கு செல்லும் மின்சார ரயில் வியாழன் மற்றும் சனிக்கிழமை (ஜூலை 11, 13) அரக்கோணத்துடன் நிறுத்தப்படும்.

மறுமாா்க்கமாக திருத்தணியிலிருந்து அதிகாலை 4.30 மற்றும் 5.30 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12, 14) அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு சென்ட்ரல் வந்தடையும்.

இதுபோல் அரக்கோணத்திலிருந்து திருத்தணிக்கு அதிகாலை 4 மணி மற்றும் 5 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழுவதுமாக ரத்து செய்யப்படும். திருத்தணியிலிருந்து அரக்கோணத்துக்கு இரவு 11.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் வியாழன் மற்றும் சனிக்கிழமை முழுவதுமாக ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.