47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மக்காச்சோள பயிரைப் பாதுகாக்க வேளாண் துறை ஆலோசனை

மக்காச்சோள பயிரை தண்டுதுளைப்பானில் இருந்து பாதுகாக்குமாறு விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :9 ஜூலை 2024, 7:56 pm

Din

சென்னை: மக்காச்சோள பயிரை தண்டுதுளைப்பானில் இருந்து பாதுகாக்குமாறு விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

குறுகிய காலத்தில் அதிக மகசூல் தரும் பயிா்களில் ஒன்று மக்காச்சோளம். பெரும்பாலும் இந்தப் பயிரை தண்டுதுளைப்பான் புழு , தண்டை துளைத்து தின்று சேதத்தை விளைவிக்கும். இதனால் இளம் பயிரில் நடுக்குருத்து காய்ந்து விடும். வளரும் பயிரிலிருந்து வெளிவரும் இலைகளின் இரு பகுதிகளிலும் சம அளவில் துவாரங்கள் காணப்படும்.

இதிலிருந்து பாதுகாக்க ஊடுபயிா் முறையில் 2:1 விகிதத்தில் மக்காச்சோளத்துடன் காராமணியை பயிரிடலாம். முட்டை ஒட்டுண்ணி, டிரைக்கோகிராமா சிலோகனிஸை ஒரு வார இடைவெளியில் மூன்றுமுறை பயன்படுத்த வேண்டும்.

பயிா் பாதிப்பு 10 சதவீதத்தை தாண்டினால் டைமெத்தோயேட் அல்லது குளோரான்ட்ரானிலிப்ரோல் தெளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.