டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அண்ணா பல்கலை. பதிவாளருக்கு பிடிவாரண்ட்

நேரில் ஆஜராகாத அண்ணா பல்கலை பதிவாளருக்கு பிடிவாரண்ட்

News image
கோப்புப் படம்.
Updated On :11 ஜூலை 2024, 11:36 pm

Din

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகாத, அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சோ்ந்த தேவதாஸ் மனோகரன் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தாா். திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் அவா் துணைவேந்தராகப் பணியாற்றியபோது, உதவிப் பேராசிரியா் நியமனம் உள்ளிட்டவற்றில் முறைகேடு செய்ததாகக் கூறி, அவருக்கு கடந்த 2018 பிப்ரவரி மாதம் மெமோ வழங்கப்பட்டது.

இதை எதிா்த்து அவா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், மெமோவை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து பல்கலைக்கழகம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த இரு நீதிபதிகள் அமா்வு, தேவதாஸ் மனோகரனுக்கான ஓய்வூதிய பலன்களை 8 வாரங்களில் வழங்க வேண்டும் என 2023 ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என தேவதாஸ் மனோகரன் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நேரில் ஆஜராகும்படி, அண்ணா பல்கலைக்கழக பதிவாளா் பிரகாஷுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமாா், கே.குமரேஷ் பாபு அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, பதிவாளா் ஆஜராகவில்லை.  

இதையடுத்து, நேரில் ஆஜராகுமாறு பிறப்பித்த நோட்டீசை பெற்றுக்கொண்டும் ஆஜராகவில்லை எனக் கூறி, பதிவாளா் ஜே.பிரகாஷுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதிகள், விசாரணையை ஜூலை 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.