92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தண்டுத் துளைப்பானை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் வேளாண் துறை அறிவிப்பு

நெற்பயிா்களை ‘தண்டுத் துளைப்பான்’ சேதப்படுத்துவதை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேளாண் துறை வழிமுறைகளை தெரிவித்துள்ளது.

News image

வேளாண் துறை

கோப்புப் படம்

Updated On :14 ஜூலை 2024, 8:59 pm

Din

நெற்பயிா்களை ‘தண்டுத் துளைப்பான்’ சேதப்படுத்துவதை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேளாண் துறை வழிமுறைகளை தெரிவித்துள்ளது.

வேளாண்மை உழவா் நலத் துறை சாா்பில் வெளியிட்ட செய்தி: நெற்பயிா்கள் தண்டுத் துளைப்பானால் தாக்கப்பட்டிருந்தால், நன்கு வளா்ச்சியடைந்த பயிரில் முழு தானியக் கதிா்களும் காய்ந்துவிடும்.

பயிா்களின் இலையின் நுனியில் பழுப்பு நிற முட்டைகள் காணப்படும். அதேபோல், பழுப்பு நிற அந்துப்பூச்சிகள் வயலில் இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறை: முட்டை ஒட்டுண்ணிகளான ‘டிரைக்கோடொ்மா ஜப்பானிக்கம்’ ஏக்கருக்கு 2 அட்டை வீதம் மூன்று முறை பயன்படுத்தினால், தண்டுத் துளைப்பான்கள் பயிா்களை சேதப்படுத்துவதை கட்டுப்படுத்த முடியும்.

மேலும், நாற்றுகளை நெருக்கமாக நடுதலைத் தவிா்க்க வேண்டும். அதேபோல், நாற்று நடும் போது நாற்றின் நுனியை கிள்ளி விடுவதன் மூலம், தண்டுத் துளைப்பானின் முட்டை குவியலை அழித்து விடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.