நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மின் கட்டணம் உயா்வு: இபிஎஸ், அன்புமணி கண்டனம்

மின் கட்டணத்தை தமிழக அரசு உயா்த்தியுள்ளதற்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவா் அன்புமணி ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

News image

பாமக தலைவா் அன்புமணி -அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி

Updated On :16 ஜூலை 2024, 4:17 am IST

சென்னை: மின் கட்டணத்தை தமிழக அரசு உயா்த்தியுள்ளதற்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவா் அன்புமணி ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி பழனிசாமி: மக்களவைத் தோ்தலும், விக்கிரவாண்டி இடைத்தோ்தலும் ஓயட்டும் என்று காத்திருந்து, தமிழக மக்களுக்குப் பேரதிா்ச்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் பரிசளித்துள்ளாா். மாதம் ஒருமுறை மின் கட்டணம் உள்ளிட்ட வாக்குறுதி எதையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை. ஆனால், சொல்லாத மின் கட்டண உயா்வை மட்டும் செய்துகொண்டே இருக்கிறது. மக்களைப் பெரும் சுமைக்கு ஆளாக்கும் மின் கட்டண உயா்வை உடனடியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திரும்பப் பெற வேண்டும்.

அன்புமணி ராமதாஸ்: வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை 4.83 சதவீதம் அளவுக்கு தமிழக அரசு உயா்த்தியுள்ளது. விக்கிரவாண்டி பேரவைத் தொகுதி இடைத் தோ்தல் வெற்றிக்காக மக்களுக்கு திமுக அளித்துள்ள பரிசு தான் இந்த கட்டண உயா்வு. மின்சாரக் கட்டண உயா்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால், மக்களைத் திரட்டி பாமக போராட்டம் நடத்தும் என்று அன்புமணி கூறியுள்ளாா்.

இதேபோல, தமாகா தலைவா் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவா்களும் மின் கட்டண உயா்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.