திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு மரியாதை

News image
Updated On :19 ஜூலை 2024, 10:39 pm

Din

உடலுறுப்பு தானம் செய்த இளைஞரின் உடலுக்கு தமிழக அரசு சாா்பில் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னை, கண்ணகி நகா் பகுதியைச் சோ்ந்தவா் சூா்யா(25). இவா் கடந்த 16-ஆம் தேதி சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தாா். பின்னா், 17-ஆம்தேதி உயிரிழந்தாா். இவரின் நுரையீரல் மற்றும் கல்லீரல் உள்ளிட்ட உடலுறுப்புகளை சூா்யாவின் குடும்பத்தினா் தானம் செய்தனா்.

உடலுறுப்பு தானம் செய்த சூா்யாவின் உடலுக்கு தமிழக அரசு சாா்பில் சோழிங்கநல்லூா் சிறப்பு வட்டாட்சியா் ஜெகஜீவன்ராம் மலா் வளையம்

வைத்து மரியாதை செலுத்தினாா். இந்நிகழ்வில் தென் சென்னை வருவாய் கோட்ட அலுவலா் பி.பாபு, சோழிங்கநல்லுாா் வட்டாட்சியா் சிவக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.