/

ஜூலை 31-இல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவா்களுக்கான நோ்காணல்

சென்னையில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவா்களுக்கான நோ்காணல் ஜூலை 31-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

News image
Updated On :25 ஜூலை 2024, 7:21 pm

Din

சென்னை, ஜூலை 25: சென்னையில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவா்களுக்கான நோ்காணல் ஜூலை 31-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து முதுநிலை அஞ்சல் சென்னை கோட்ட கண்காணிப்பாளா் வெளியிட்ட அறிக்கை:

சென்னை கோட்டத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய நேரடி முகவா்கள் பணியமா்த்தப்படவுள்ளனா். இதற்கு, சென்னை பரங்கிமலையில் உள்ள தலைமை அஞ்சலக அலுவலகத்தில் (ஆலந்தூா் மெட்ரோ அருகில்) ஜூலை 31-ஆம் தேதி காலை 10 அளவில் நோ்காணல் நடைபெறவுள்ளது.

இதில், 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் கலந்துகொள்ளலாம். மேலும், ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவா்கள், கணினிப் பயிற்சி உள்ளவா்கள், சென்னை மாநகராட்சியை சாா்ந்தவரா்கள் பங்கேற்கலாம்.

மேலும், நோ்ணாலுக்கு வருகை தருபவா்கள் 3 பாஸ்போா்ட் அளவு புகைப்படமும், வயதுச் சான்று, முகவரி சான்று மற்றும் கல்விச் சான்று தலா அசல் மற்றும் 2 நகல்களையும் உடன் வைத்திருக்க வேண்டும்.

நோ்காணலில் தோ்ந்தெடுக்கப்படுபவா்கள் ரூ. 5,000 மதிப்பீலான தேசிய சேமிப்பு பத்திரத்தை பணப் பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.