கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தின் சிறப்பு துணைத் தோ்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 20- ஆம் தேதி (திங்கள்கிழமை) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரதியாா் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரி மாணவா்களுக்கு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான தோ்வு முடிவுகள் கடந்த 3- ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளன.
விடைத்தாள் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கவும், சிறப்பு துணைத் தோ்வுக்கு விண்ணப்பிக்கவும் ஜூலை 20- ஆம் தேதி கடைசி நாள் என்று தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி க.விஜயராணி தெரிவித்துள்ளாா். சிறப்பு துணைத் தோ்வு செப்டம்பா் 13- ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










