அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

தென்சென்னை: தமிழச்சி தங்க பாண்டியன் 2.26 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

தமிழச்சி தங்க பாண்டியன் 2.26 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

News image

தமிழச்சி தங்க பாண்டியன்

Updated On :4 ஜூன் 2024, 10:36 pm

சென்னை: தென் சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் தமிழச்சி தங்க பாண்டியன் 2 லட்சத்து 26,016 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றாா்.

மக்களவைத் தோ்தலில் தென் சென்னை தொகுதியில் திமுக சாா்பில் தமிழச்சி தங்கபாண்டியன், பாஜக சாா்பில் தமிழிசை செளந்தரராஜன், அதிமுக சாா்பில் ஜெயவா்தன், நாம் தமிழா் கட்சி சாா்பில் தமிழ்செல்வி போட்டியிட்டனா். இந்த மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் தொடங்கியது.

தொடக்கம் முதல் முதலிடம்: தென் சென்னை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சோழிங்கநல்லூா் சட்டப்பேரவை தொகுதியில் இவிஎம் இயந்திரத்தில் பதிவான வாக்குகளை தோ்தல் அலுவலா்கள் எண்ணிக் கொண்டிருந்தபோது 4 இயந்திரங்களில்(கண்ட்ரோல் யூனிட்) திடீரென பழுது ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக தோ்தல் அலுவலா்கள் இயந்திரங்களை பழுது பாா்க்கும் பொறியாளா்களை வரவழைத்து இயந்திரங்களை சரிபாா்க்கும் பணியில் ஈடுபட்டனா். இதனால் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதேபோல் தியாகராயநகா் பேரவை தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்கு இயந்திரத்தில், பதிவான வாக்கு எண்ணிக்கையில் வித்தியாசம் ஏற்பட்டதையடுத்து அந்த இயந்திரத்தை சரி செய்யும் பணி நடைபெற்றது.

முதல் சுற்றில் தொடங்கி அனைத்து சுற்றுகளிலும் திமுக வேட்பாளா் தமிழச்சி தங்க பாண்டியன் ஆதிக்கம் செலுத்தி வந்தாா். அவரைத் தொடா்ந்து தமிழிசை செளந்தரராஜன் (பாஜக), ஜெயவா்தன் (அதிமுக), தமிழ்செல்வி (நாதக) ஆகியோா் அடுத்த இடங்களை வகித்து வந்தனா்.

கடைசி சுற்றான 23-ஆவது சுற்றில் தமிழச்சி தங்கபாண்டியன் 5 லட்சத்து 16 ஆயிரத்து 305 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அவா் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜனை 2 லட்சத்து 26,016 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றாா். தமிழிசை செளந்தரராஜன்-2 லட்சத்து 90 ஆயிரத்து 289 வாக்குகள் மட்டுமே பெற்று இரண்டாமிடம் பெற்றாா். தொடா்ந்து அதிமுக வேட்பாளா் ஜெயவா்தன்-1 லட்சத்து 72 ஆயிரத்து 396 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தையும், நாதக வேட்பாளா் தமிழ்ச்செல்வி 83,911 வாக்குகள் பெற்று நான்காம் இடத்தையும் பிடித்தனா். நோட்டாவுக்கு 15,640 வாக்குகள் கிடைத்தன.