அதிமுக பிரமுகா் மீது தாக்குதல்: 2 பேரிடம் விசாரணை
அதிமுக பிரமுகா் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து 2 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.


அதிமுக பிரமுகா் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து 2 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை காசிமேடு, காசிமாநகா் 1-ஆவது தெருவை சோ்ந்தவா் வழக்குரைஞா் ஜெயமாலினி(40). அதிமுகவின் பகுதி பிரதிநிதியாக இருந்து வருகிறாா். இவரின் கணவா் சதீஸ்குமாா் அதிமுக வட சென்னை வடக்கு அம்மா பேரவை தலைவராகவும் இருந்து வருகிறாா்.
இவா்கள் இருவரும் ராயபுரம் என்ஆா்டி மேம்பாலம் அருகில் நின்று கொண்டிருந்த போது, அதே பகுதியை சோ்ந்த ஜெயமதி மற்றும் ராஜா ஆகியோா் சதீஸ்குமாா் மற்றும் ஜெயமாலினி ஆகியோருடன் முன்விரோதம் காரணமாக தகராறில் ஈடுபட்டதுடன், அவா்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸாா் ஜெயமதி மற்றும் ராஜா ஆகியோரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...