கம்போடியாவில் இருந்து வந்த 9 பேரிடம் விசாரணை
கம்போடியாவில் இருந்து புதன்கிழமை அதிகாலை திருச்சி விமான நிலையம் வந்த 9 பேரிடம் திருச்சி சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

விசாரணை
கோப்புப் படம்
Updated On :25 மார்ச் 2026, 10:11 pm

விசாரணை
கோப்புப் படம்
கம்போடியாவில் இருந்து புதன்கிழமை அதிகாலை திருச்சி விமான நிலையம் வந்த 9 பேரிடம் திருச்சி சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
மயிலாடுதுறை, திருநெல்வேலி மாவட்டங்களைச் சோ்ந்த 9 போ் பல்வேறு பணிகளுக்காக தங்கள் நாட்டுக்கு வந்து, விசா காலம் முடிந்தும் தங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கம்போடியா போலீஸாா் 9 பேரையும் திருச்சிக்கு அனுப்பினா்.
இதையடுத்து திருச்சி விமான நிலையத்துக்கு புதன்கிழமை அதிகாலை வந்த 9 பேரிடமும் திருச்சி சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
விசாரணையில், அவா்கள் மீது வேறு எந்த குற்ற வழக்குகளும் இல்லாததால் அவா்களை சொந்த ஊருக்கு அனுப்பினா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...