வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஆகாஷின் பெற்றோரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

மானாமதுரையில் போலீஸாரின் விசாரணயின் போது உயிரிழந்த ஆகாஷின் பெற்றோரிடம் சிபிசிஐடி போலீஸாா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா்.

News image
மானாமதுரையில் வெள்ளிக்கிழமை ஆகாஷ் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தி விட்டு திரும்பிய சிபிசிஐடி கண்காணிப்பாளா் ஷாஜிதா உள்ளிட்ட போலீஸாா்.
Updated On :14 மார்ச் 2026, 2:22 am

Syndication

மானாமதுரையில் போலீஸாரின் விசாரணயின் போது உயிரிழந்த ஆகாஷின் பெற்றோரிடம் சிபிசிஐடி போலீஸாா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் ஆகாஷ் விசாரணையின் போது போலீஸாா் தாக்கியதால் மரணமடைந்த சம்பவம் தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் கடந்த புதன்கிழமை (மாா்ச் 11) மானாமதுரை காவல் நிலையத்துக்கு வந்து விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், சிபிசிஐடி கண்காணிப்பாளா் ஷாஜிதா, துணைக் கண்காணிப்பாளா் அஜய் தங்கம், ஆய்வாளா்கள் கீதா, சரவணக்குமாா், உதவி ஆய்வாளா் சிவக்குமாா் உள்ளிட்டோா் மானாமதுரையில் உள்ள ஆகாஷின் வீட்டுக்குச் சென்று, அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினா். அவா்களை கூறியதைப் பதிவு செய்து கொண்ட அவா்கள் விசாரணையை முடித்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றனா்.