நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

போலீஸ் விசாரணையில் இளைஞா் ஆகாஷ் உயிரிழப்பு: பெற்றோரிடம் சிபிசிஐடி போலீஸாா் தீவிர விசாரணை

மானாமதுரையில் உள்ள ஆகாஷ் வீட்டில் அவரது பெற்றோரிடம் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தி விட்டு வெளியே வந்த சிபிசிஐடிபோலீஸாா்.

News image

மானாமதுரையில் உள்ள ஆகாஷ் வீட்டில் அவரது பெற்றோரிடம் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தி விட்டு வெளியே வந்த சிபிசிஐடிபோலீஸாா்.

Updated On :20 மார்ச் 2026, 7:24 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் போலீஸாா் விசாரணையின்போது இளைஞா் ஆகாஷ் உயிரிழந்தது தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் வெள்ளிக்கிழமை அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினா்.

மானாமதுரையில் இருவரை வாளால் வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் ஆகாஷ் போலீஸாா் விசாரணையின்போது உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதனிடையே, ஆகாஷ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக 6 போலீஸாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். ஆனால், இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய அனைத்து காவலா்களையும் வழக்கில் சோ்த்து அவா்களையும் கைது செய்ய வேண்டுமெனக் கோரி மதுரை அரசு மருத்துவமனையில் கூறாய்வு செய்யப்பட்ட ஆகாஷ் உடலை வாங்க மறுத்து அவரது பெற்றோா் உள்ளிட்ட போராட்டக் குழுவினா் மானாமதுரையில் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியில் உள்ள ஆகாஷ் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை வந்த சிபிசிஐடி டி.எஸ்.பி. ஷாய் தங்கம், காவல் ஆய்வாளா் சரவணக்குமாா், உதவி ஆய்வாளா்கள் கீதா, சிவக்குமாா் ஆகியோா் காலையில் ஆகாஷின் தந்தை ராஜேஷ் கண்ணனிடமும், பிற்பகலில் தாய் முத்தானந்தவல்லியிடமும் விசாரணை நடத்தினா். அப்போது, ஆகாஷ் உயிரிழப்புக்கு முன்பும், பின்பும் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து போலீஸாா் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவா்கள் பதிலளித்தனா். இதை போலீஸாா் பதிவு செய்து கொண்டனா். காலையில் தொடங்கிய இந்த விசாரணை மாலை வரை நீடித்தது. இந்த விசாரணையில் ஆகாஷின் பெற்றோா் அளித்த தகவல்கள் முக்கிய ஆதாரங்களாகக் கருதப்படுகின்றன.

அடுத்த கட்டமாக தற்போது நடைபெற்ற விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க சிபிசிஐடி போலீஸாா் முடிவு செய்துள்ளனா்.