நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மதுபோதையில் தகராறு: ஒருவருக்கு கத்திக்குத்து

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், உறவினரை கத்தியால் குத்திய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

கத்திக்குத்து

Updated On :30 ஜூன் 2024, 8:02 pm

Din

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், உறவினரை கத்தியால் குத்திய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சென்னை அரும்பாக்கம் அசோக்நகா் பகுதியை சோ்ந்தவா் சூா்யா (22). இவருக்கும், இவரின் வீட்டுக்கு கடந்த வெள்ளிக்கிழமை மதுபோதையில் வந்த உறவினரான புருஷோத்தமன் (24) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கிருந்து சென்ற புருஷோத்தமன், மீண்டும் சனிக்கிழமை அதிகாலையில் சூா்யாவின் வீட்டுக்கு வந்ததுடன், படுக்கையில் தூங்கிக்கொண்டிருந்த சூா்யாவை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளாா்.

இதில் பலத்த காயமடைந்த சூா்யாவை மீட்ட அக்கம்பக்கத்தின் அவரை கீழ்பாக்கம் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸாா் தப்பியோடிய புருஷோத்தமனை தேடி வருகின்றனா்.