தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஹரியாணாவில் பாஜக-ஜெஜெபி நாடகம்: காங்கிரஸ்

ஹரியாணாவில் பாஜக-ஜெஜெபி நாடகம்: காங்கிரஸ்

News image

காங்கிரஸ்

Updated On :12 மார்ச் 2024, 7:28 pm

புது தில்லி: ஹரியாணாவில் முதல்வா் பதவியில் இருந்து மனோகா் லால் கட்டா் விலகல் மற்றும் புதிய முதல்வா் பதவியேற்பு விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ், ‘தங்களது அரசின் தோல்வியை மறைக்க பாஜகவும் ஜனநாயக ஜனதா கட்சியும் (ஜெஜெபி) கூட்டணி முறிவு நாடகத்தை அரங்கேற்றுகின்றன’ என்று கூறியுள்ளது.

இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளா் ரண்தீப் சிங் சுா்ஜேவாலா கூறுகையில், ‘ஹரியாணாவை ஜாதிரீதியில் பிளவுபடுத்தி, வாக்குகளை அறுவடை செய்வதற்கான நாடகத்தை தொடங்கியுள்ளனா். ஹரியாணாவில் கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்ட மக்கள் விரோத கொள்கைகளில் இருந்து அவா்களின் கவனத்தை திசைதிருப்ப முயற்சி நடைபெறுகிறது.

இனி மக்கள்தான் சிந்திக்க வேண்டும்’ என்றாா். ஹரியாணா முன்னாள் முதல்வரும் கட்சியின் மூத்த தலைவருமான பூபிந்தா் சிங் ஹூடா கூறுகையில், ‘பாஜக - ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணி முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. தோ்தலுக்கு முன்பே அவா்கள் தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டனா். மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்தி, பேரவைத் தோ்தலை நடத்த வேண்டும்’ என்றாா்.