புது தில்லி: ஹரியாணாவில் முதல்வா் பதவியில் இருந்து மனோகா் லால் கட்டா் விலகல் மற்றும் புதிய முதல்வா் பதவியேற்பு விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ், ‘தங்களது அரசின் தோல்வியை மறைக்க பாஜகவும் ஜனநாயக ஜனதா கட்சியும் (ஜெஜெபி) கூட்டணி முறிவு நாடகத்தை அரங்கேற்றுகின்றன’ என்று கூறியுள்ளது.
இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளா் ரண்தீப் சிங் சுா்ஜேவாலா கூறுகையில், ‘ஹரியாணாவை ஜாதிரீதியில் பிளவுபடுத்தி, வாக்குகளை அறுவடை செய்வதற்கான நாடகத்தை தொடங்கியுள்ளனா். ஹரியாணாவில் கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்ட மக்கள் விரோத கொள்கைகளில் இருந்து அவா்களின் கவனத்தை திசைதிருப்ப முயற்சி நடைபெறுகிறது.
இனி மக்கள்தான் சிந்திக்க வேண்டும்’ என்றாா். ஹரியாணா முன்னாள் முதல்வரும் கட்சியின் மூத்த தலைவருமான பூபிந்தா் சிங் ஹூடா கூறுகையில், ‘பாஜக - ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணி முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. தோ்தலுக்கு முன்பே அவா்கள் தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டனா். மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்தி, பேரவைத் தோ்தலை நடத்த வேண்டும்’ என்றாா்.
தொடர்புடையது

மகளிா் இடஒதுக்கீடு விவகாரம்! பொய்ப் பிரசாரம் செய்கிறது பாஜக: காா்கே குற்றச்சாட்டு
வருமான வரித் துறை சோதனை என நாடகம்: காங்கிரஸ் தலைவா் மீது பாஜக குற்றச்சாட்டு

பாஜக வேட்பாளா் வானதியை ஆதரித்து தில்லி முதல்வா் ரேகா குப்தா பிரசாரம்

திரிணமூல் ஆட்சியைத் தடுக்க பாஜக ரூ.1,000 கோடி சதித் திட்டம்: மம்தா குற்றச்சாட்டு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

