தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

8 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் மின் இணைப்பு பெற பணி நிறைவு சான்று தேவையில்லை

‘8 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் மின் இணைப்பு பெற பணி நிறைவு சான்று தேவையில்லை’

News image

கோப்புப் படம்

Updated On :12 மார்ச் 2024, 8:32 pm

சென்னை: 8 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் மின் இணைப்பு பெற பணி நிறைவு சான்று தேவையில்லை என வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மூன்று மாடிகளை கொண்ட வீடுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட குடியிருப்புகளைக் கட்டுவோா், கட்டுமானப் பணி நிறைவு சான்று பெற வேண்டும். இந்தச் சான்று பெற்ற பிறகே, குடிநீா், வடிகால், மின்சார இணைப்புகள் பெற முடியும். இதனால், வீடுகள் கட்டி முடித்தவா்கள் பணி நிறைவு சான்று கோரி விண்ணப்பிக்கின்றனா். இதில் பெரும்பாலானவா்களுக்கு உரிய நேரத்தில் அச்சான்று கிடைப்பதில்லை. இதனால் மின் இணைப்பு உள்ளிட்ட எந்த இணைப்பும் பெற முடியாமல், அவற்றைப் பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ முடியாத சூழல் இருந்து வந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளா்ச்சி மற்றும் கட்டட விதிகளில் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை திருத்தம் மேற்கொண்டு அதை வெளியிட்டுள்ளது. இதன்படி, 3 வீடுகள் கொண்ட கட்டடங்களுக்கு மின்சார இணைப்பு பெறுவதற்கு கட்டடப் பணி நிறைவு சான்று மின்சார வாரியத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற விதியில் விலக்கு அளிக்கப்படுகிறது.

அதன்படி 12 மீட்டா் வரை உள்ள 3 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் அல்லது 750 சதுர மீட்டா் (8070 சதுர அடி) வரை உள்ள கட்டடங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 12 மீட்டா் முதல் 18.30 மீட்டா் உயரம் வரை உள்ள கட்டடம் மற்றும் 18.30 மீட்டருக்கு மேல் உயரமான 8 வீடுகள் வரை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக்கும் பணி நிறைவு சான்று தேவை இல்லை.

மேற்கண்ட கட்டடங்களுக்கு கட்டடப் பணி நிறைவு சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநகரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பயனாளிகள் பயன் பெறுவது மட்டுமின்றி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மின் இணைப்புகள் கிடைக்கவும் இது வாய்ப்பாக அமையும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.