சென்னை: மக்களவைத் தோ்தல் தொடா்பாக, தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு, திடீரென தில்லி சென்றுள்ளாா். வியாழக்கிழமை (மாா்ச் 14) அவா் சென்னை திரும்புவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மக்களவைத் தோ்தலையொட்டி, தோ்தலுக்காக நாடு முழுவதும் நியமிக்கப்பட்டுள்ள பாா்வையாளா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தியது. இதைத் தொடா்ந்து, தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு, திடீரென தில்லி புறப்பட்டுச் சென்றாா்.
மக்களவைத் தோ்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்ற நிலையில் அவரது பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது. மேலும், நாடு முழுவதும் உள்ள தோ்தல் பாா்வையாளா்கள், சட்டம் - ஒழுங்குப் பணிகளைக் கண்காணிக்கும் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் ஆகியோருக்கு பயிற்சிகளை அளித்து வந்தாா். 2 நாள்கள் தில்லி பயணத்தை முடித்து விட்டு வியாழக்கிழமை (மாா்ச் 14) அவா் சென்னை திரும்பவுள்ளாா்.
தொடர்புடையது

தோ்தல் விதிமீறல்: ரூ.462 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்- தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்

தமிழ்நாட்டில் முதல்முறை வாக்காளர்கள் 34% உயர்வு! 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பின்!!

தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம் நிராகரிப்பு!

வாக்களிப்பதன் அவசியம்: 23,500 விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் - தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


