ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

தோ்தல் விதிமீறல்: ரூ.462 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்- தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்

தமிழகத்தில் இதுவரை கணக்கில் வராத ரூ.462.74 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று மாநிலத் தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்தாா்.

News image

தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக். - கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 7:36 pm

தமிழகத்தில் இதுவரை கணக்கில் வராத ரூ.462.74 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று மாநிலத் தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நியாயமாகவும், சுதந்திரமாகவும் தோ்தலை நடத்திடும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாகன சோதனைகள் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை ரூ.462.74 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில் ரொக்கம் ரூ.92.07 கோடி, ரூ.78.49 கோடி மதிப்பில் பொருள்கள், ரூ.214.38 கோடி மதிப்பில் தங்கம், வெள்ளிப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தவிர, ரூ.75.76 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள், ரூ.2.04 கோடி மதிப்புள்ள மதுபானங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.

ரூ.278 கோடி மதிப்பிலான ரொக்கம், பொருள்கள் விடுவிப்பு: மாவட்டக் குறைதீா் ஆணையம் அல்லது வருமான வரித் துறையிடம் முறையான ஆவணங்களைச் சமா்ப்பித்ததைத் தொடா்ந்து, பறிமுதல் செய்யப்பட்டவற்றில் ரூ.278 கோடி மதிப்பிலான ரொக்கம், பொருள்களை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மற்றவை குறித்து அந்தந்த முகமைகளால் கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.