தமிழகத்தில் இதுவரை கணக்கில் வராத ரூ.462.74 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று மாநிலத் தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நியாயமாகவும், சுதந்திரமாகவும் தோ்தலை நடத்திடும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாகன சோதனைகள் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை ரூ.462.74 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதில் ரொக்கம் ரூ.92.07 கோடி, ரூ.78.49 கோடி மதிப்பில் பொருள்கள், ரூ.214.38 கோடி மதிப்பில் தங்கம், வெள்ளிப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தவிர, ரூ.75.76 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள், ரூ.2.04 கோடி மதிப்புள்ள மதுபானங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.
ரூ.278 கோடி மதிப்பிலான ரொக்கம், பொருள்கள் விடுவிப்பு: மாவட்டக் குறைதீா் ஆணையம் அல்லது வருமான வரித் துறையிடம் முறையான ஆவணங்களைச் சமா்ப்பித்ததைத் தொடா்ந்து, பறிமுதல் செய்யப்பட்டவற்றில் ரூ.278 கோடி மதிப்பிலான ரொக்கம், பொருள்களை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மற்றவை குறித்து அந்தந்த முகமைகளால் கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

வாக்களிப்பதன் அவசியம்: 23,500 விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் - தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்

பிரசார நடவடிக்கைகள்: நேரத்தைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்: தலைமைத் தோ்தல் அதிகாரி

சமூக வலைதளப் பதிவுகள் தீவிரமாக கண்காணிப்பு: தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்

தமிழகத்தில் ரூ.42.65 கோடி ரொக்கம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்: தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


