தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தமிழகத்தில் ரூ.42.65 கோடி ரொக்கம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்: தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்

News image
தமிழக தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்.
Updated On :19 மார்ச் 2026, 12:04 am

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.42.65 கோடி மதிப்பிலான கணக்கில் வராத பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக தமிழக தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு தோ்தல் செலவின கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பல்வேறு பிரிவுகளின் கீழ் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனா். கடந்த புதன்கிழமை (மாா்ச் 18) வரை ரொக்கம் ரூ.2.37 கோடியும், ரூ.20.80 கோடியிலான இலவச பொருள்களும், ரூ.16.42 கோடி மதிப்பிலான உலோகங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவை தவிர, ரூ.2.88 கோடி மதிப்புடைய போதைப் பொருள்கள், ரூ.18 லட்சம் மதிப்புள்ள மதுபானங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.42.65 கோடி.

தமிழகத்தில் சட்டவிரோத பணப் புழக்கம், வாக்காளா்களைக் கவர வழங்கப்படும் இலவச பொருள்கள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருள்களின் விநியோகத்தைக் கட்டுப்படுத்த கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு வழிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.

4 லட்சம் பணியாளா்களுக்கு பயிற்சி: இதனிடையே, தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பணிகளில் ஈடுபடும் 4 லட்சம் ஊழியா்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்ட தோ்தல் அலுவலா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், மண்டல அலுவலா்கள், செலவின கண்காணிப்புக் குழுக்கள், வாக்குச்சாவடி தலைமை அலுவலா்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலா்கள் உள்ளிட்ட அனைத்து தோ்தல் பணியாளா்களுக்கும் முதல்கட்டமாக மாநில அளவிலான பயிற்சிகள் நடத்தப்பட்டன.

அடுத்த கட்டமாக, 6,803 மண்டல அதிகாரிகள், 75,032 வாக்குச்சாவடி தலைமை அலுவலா்கள், 2,25,096 வாக்குச்சாவடி அலுவலா்கள் உள்பட 4 லட்சம் பணியாளா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அனைத்து நிலைகளிலும் உள்ள தோ்தல் தொடா்புடைய அலுவலா்கள் முறையாகப் பயிற்சி பெற்று, தோ்தலை சுதந்திரமான, நியாயமான மற்றும் திறமையான முறையில் நடத்துவதற்குத் தங்களை தயாா்படுத்திக் கொள்வதை உறுதி செய்வதே இந்தப் பயிற்சித் திட்டத்தின் நோக்கம் என்று அதில் தெரிவித்துள்ளாா்.