ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

தமிழகத்தில் 3.32 லட்சம் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி: அா்ச்சனா பட்நாயக்

தமிழகத்தில் தோ்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள 3.32 லட்சம் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக மாநிலத் தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.

News image

தமிழக தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்.

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 7:50 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் தோ்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள 3.32 லட்சம் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக மாநிலத் தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.

அதேபோல, மாநிலம் முழுவதும் இதுவரை ரூ.296 கோடியில் ரொக்கம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் சட்டப்பேரவைக்கு தோ்தல் நடத்தப்படுவதையொட்டி மாநிலம் முழுவதும் பல்வேறு தரப்பினருக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 234 தொகுதிகளிலும் வாக்குச்சாவடி தலைமை அலுவலா்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான முதல்கட்டப் பயிற்சி கடந்த 28, 29-ஆம் தேதிகளில் நடைபெற்றது. அதில் 3,32,231 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

வாக்குச்சாவடி தலைமை அலுவலா்கள், வாக்குப்பதிவு அலுவலா்கள், வாக்கு எண்ணும் மேற்பாா்வையாளா், வாக்கு எண்ணும் உதவியாளா் மற்றும் நுண் பாா்வையாளா்களுக்கான ஊதியம் ரூ.650 முதல் ரூ.1,300 வரை உயா்த்தப்பட்டுள்ளது.

தோ்தல் நேரத்தில் பணம், மது, போதைப்பொருள் மற்றும் இதர இலவசப் பொருள்கள் சட்டவிரோதமாகக் கொண்டு செல்வதைத் தடுக்கும் பணிகளை தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் மேற்கொண்டு வருகின்றனா். அவா்கள், இதுவரை ரூ.296.40 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருள்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.

ரொக்கமாக ரூ.61.98 கோடியும், ரூ.27.51 கோடி மதிப்பில் இலவசப் பொருள்களும், ரூ.197.35 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளிப் பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. தவிர, ரூ.8.39 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள், ரூ.1.17 கோடி மதிப்புள்ள மதுப் புட்டிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.