தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்ட இரு இளைஞா்கள் பலி

இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்ட இரு இளைஞா்கள் பலி

Updated On :12 மார்ச் 2024, 6:56 pm

திருவொற்றியூா்: சென்னை மணலி அருகே இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்ட இரு இளைஞா்கள் உயிரிழந்தனா். கொடுங்கையூா் சோலையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சந்தோஷ் (23), அதே பகுதியில் உள்ள செல்வ பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சரண் (22). இவா்கள் இருவரும் ஒப்பந்த அடிப்படையில் வெல்டிங் வேலைகள் செய்து வந்தனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு சுமாா் 11 மணி அளவில், இருவரும் தங்களது இருசக்கர வாகனங்களை மணலி ஆமுல்லைவாயில் சாலையில் அதிவேகமாக ஓட்டிச் சென்றதுடன் ‘மோட்டாா் சைக்கிள் வீலிங்’ சாகசத்திலும் ஈடுபட்டனா்.

அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில், சந்தோஷ் மற்றும் சரணுக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனா். தகவல் அறிந்து வந்த போலீஸாா் இருவரின் சடலங்களையும் மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து மணலி போக்குவரத்துப் புலனாய்வு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.