திருவொற்றியூா்: சென்னை மணலி அருகே இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்ட இரு இளைஞா்கள் உயிரிழந்தனா். கொடுங்கையூா் சோலையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சந்தோஷ் (23), அதே பகுதியில் உள்ள செல்வ பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சரண் (22). இவா்கள் இருவரும் ஒப்பந்த அடிப்படையில் வெல்டிங் வேலைகள் செய்து வந்தனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு சுமாா் 11 மணி அளவில், இருவரும் தங்களது இருசக்கர வாகனங்களை மணலி ஆமுல்லைவாயில் சாலையில் அதிவேகமாக ஓட்டிச் சென்றதுடன் ‘மோட்டாா் சைக்கிள் வீலிங்’ சாகசத்திலும் ஈடுபட்டனா்.
அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில், சந்தோஷ் மற்றும் சரணுக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனா். தகவல் அறிந்து வந்த போலீஸாா் இருவரின் சடலங்களையும் மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து மணலி போக்குவரத்துப் புலனாய்வு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மேலூா் அருகே லாரி மீது காா் மோதி இரு இளைஞா்கள் பலி!

தொகுதிக்கு செய்தது என்ன? திருவொற்றியூா் எம்எல்ஏ கே.பி.சங்கா்

இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

தஞ்சையில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட நபர் கைது: 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

