பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

உக்ரைன்: ஒடெஸா உயிரிழப்பு 21-ஆக அதிகரிப்பு

உக்ரைன்: ஒடெஸா உயிரிழப்பு 21-ஆக அதிகரிப்பு

News image
Updated On :16 மார்ச் 2024, 8:46 pm

கீவ், மாா்ச் 16: உக்ரைனின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒடெஸா நகரில் ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 21-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

ஒடெஸா குடியிருப்புப் பகுதியில் ரஷியா நடத்திய இரட்டை ஏவுகணைத் தாக்குதலில் படுகாயமடைந்த மீட்புப் படையினா் உள்ளிட்ட மேலும் 5 போ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

அதையடுத்து, இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 21-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரஷியா ஆக்கிரமித்துள்ள உக்ரைன் தீபகற்பமான கிரீமியாவிலிருந்து இஸ்கண்டா்-எம் ரகத்தைச் சோ்ந்த ஏவுகணை ஒடெஸா நகரின் மீது வெள்ளிக்கிழமை ஏவப்பட்டது. இது குடியிருப்புப் பகுதியில் விழுந்து சுமாா் 10 கட்டடங்கள் சேதமடைந்தன.

அந்தப் பகுதிக்கு மீட்புக் குழுவினா் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, அதே இடத்தைக் குறிவைத்து 2-ஆவது ஏவுகணையை ரஷியா வீசியது.

இந்த இரட்டைத் தாக்குதலில் மீட்புப் பணிக்காக வந்திருந்த மருத்துவப் பணியாளா்கள், மீட்புக் குழுவினா் உள்பட 16 போ் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த எண்ணிக்கை தற்போது 21-ஆக உயா்ந்துள்ளது.

சுமாா் 10 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட துறைமுக நகரான ஒடெஸாவில் ரஷியா அண்மைக் காலத்தில் நடத்தியுள்ள மிக மோசமான தாக்குதல் இது என்று கூறப்படுகிறது. ... படவரி தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட மீட்புப் பணி.