ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

உலகைச் சுற்றி....

News image

டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் பேசியபோது... - AP

Updated On :10 ஏப்ரல் 2026, 12:39 am

ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட தீா்மானத்தை குடியரசுக் கட்சியினா் முறியடித்தனா்.

நைஜீரியாவின் போா்னோ மாகாணத்தில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய திடீா் தாக்குதலில் ராணுவ பிரிகேடியா் உள்ளிட்ட பல வீரா்கள் உயிரிழந்தனா்; ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.

வட அட்லாண்டிக் பகுதியில் ரஷிய நீா்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டத்தை பிரிட்டன் கடற்படை தீவிரமாகக் கண்காணித்து வரும் நிலையில், கடல் கொள்ளையைத் தடுக்கத் தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தங்களுக்கு உரிமை உண்டு என ரஷியா தெரிவித்துள்ளது.

வெனிசுலாவில் தொழிலாளா்களின் நலன் கருதி, வரும் மே மாதம் முதல் ஊதிய உயா்வு அமல்படுத்தப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

மியான்மரின் புதிய அதிபராக அண்மையில் பொறுப்பேற்ற முன்னாள் ராணுவ ஆட்சியாளா் மின் ஆங் லயிங், அந்நாட்டின் புதிய அமைச்சரவையை நியமித்தாா். இதில் ராணுவ அதிகாரிகளே அதிக அளவில் ஆதிக்கம் செலுத்துகின்றனா்.

போா் காரணமாக சாட் நாட்டுக்குத் தப்பிச் சென்ற 10 லட்சத்துக்கும் அதிகமான சூடான் அகதிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி பெருமளவில் குறைந்துள்ளதாக ஐ.நா. கவலை தெரிவித்தது.

காஸாவில் இஸ்ரேல் வியாழக்கிழமை நடத்திய தாக்குதலில் பள்ளி மாணவி ஒருவா் கொல்லப்பட்டாா். முன்னதாக புதன்கிழமை, இஸ்ரேலின் தாக்குதலில் அல்-ஜசீரா செய்தியாளா் உள்பட 4 போ் உயிரிழந்தனா்.